போதைப்பொருள் கடத்தல்காரர் பட்டலே சமீர கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் பட்டலே சமீர கைது

by Staff Writer 28-11-2020 | 1:26 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரரான பட்டலே சமீர என்றழைக்கப்படும் ருக்ஷான் சமீர மதுசங்க பன்னிப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களான 'குடு லால்' மற்றும் மஹவத்தே பிரேமா ஆகியோருடன் இணைந்து பட்டலே சமீர செயற்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 35 வயதான சந்தேகநபரிடமிருந்து மைக்ரோ ரக துப்பாக்கியும் 14 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.