by Staff Writer 28-11-2020 | 12:11 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றிரவு 09 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பத்தரமுல்லை, பெலவத்தை மற்றும் அக்குரேகொட ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இன்றிரவு 09 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.