by Staff Writer 28-11-2020 | 3:59 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகளில் இன்றும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் அதிகளவானோர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.