LTTE-க்கு ஆதரவாக கருத்து: நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து: நால்வர் கைது

by Staff Writer 27-11-2020 | 8:20 PM
Colombo (News 1st) தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வௌியிட்ட ஏறாவூரை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரவும் அஞ்சலி செலுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், குறித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து, மக்கள் மத்தியில் சமய மற்றும் கலாசார ரீதியில் தாக்கம் செலுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டார். அவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஏனைய செய்திகள்