கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு

by Staff Writer 27-11-2020 | 8:58 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் நேற்று (26) உயிரிழந்தனர். கொழும்பு - 08 ஐ சேர்ந்த 87 வயதான ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். COVID-19 தொற்றுடன் பக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பம்பலப்பிட்டியை சேர்ந்த 80 வயதான ஒருவர் கடந்த 25 ஆம் திகதி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் , நிமோனியா மற்றும் COVID-19 தொற்றினால் அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பேலியகொடயைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் COVID-19 தொற்றினால் அவர் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொரோனா நோயாளர்கள் 251 பேர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை COVID-19 தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 22,279 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து 410 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ,226 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான 5954 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.