அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 26-11-2020 | 8:58 PM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) முதல் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.