by Staff Writer 25-11-2020 | 4:09 PM
Colombo (News 1st) மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) உடுகம்பொல அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அலுவலகத்தின் தலைமை பொறியியலாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தேக நபரை 2 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அலுவலக பெண் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை பொறியியலாளர் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தலைமை பொறியியலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாக மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.