வென்னப்புவயில் பிடிபட்ட சருகு மான் வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

by Staff Writer 25-11-2020 | 3:04 PM
Colombo (News 1st) வென்னப்புவ - நாத்தாண்டி தப்போவ பகுதியில் மக்களினால் பிடிக்கப்பட்ட சருகு மான் ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ - தப்போவ பகுதியில் நேற்று பிரதேச மக்களால் மான் ஒன்று பிடிக்கப்பட்டது. பின்னர், அது குறித்து புத்தளம் வன ஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் அங்கு சென்றனர். இதனையடுத்து, வன ஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு சருகு மான் கொண்டு செல்லப்பட்டுள்ளது.