புத்தளம் பொலிஸாரிடம் சிக்கிய 250 கிலோகிராம் மஞ்சள்

புத்தளம் பொலிஸாரால் 250 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல் 

by Staff Writer 25-11-2020 | 10:19 AM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த 250 கிலோகிராம் மஞ்சள் புத்தளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் விமானப்படை புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய புத்தளம் பொலிஸின் விஷ போதைப்பொருள் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தளம் நகரத்திற்கு அண்மித்து அமைந்துள்ள நெற்களஞ்சியசாலையில் இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கெப் வாகனமொன்றில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.