பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

by Staff Writer 25-11-2020 | 11:38 AM
Colombo (News 1st) பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. இவ்வார இறுதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தி ஜனாதிபதி, அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மதுபானசாலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும் பிரெஞ்ச் அரசு தெரிவித்துள்ளது.