நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 24-11-2020 | 7:34 PM
Colombo (News 1st) இன்று (24) இதுவரை 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 20,795 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளாகிய 5,743 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளாகிய 90 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.