போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கந்தளாயில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது

by Staff Writer 24-11-2020 | 2:01 PM
Colombo (News 1st) திருகாணமலை - கந்தளாய் பகுதியில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க டொலர் 100 நாணயத்தாள்கள் 372 சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய கந்தளாய் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் பண்டாரவளை மற்றும் இப்பாகமுவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.