கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தல்

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் 

by Staff Writer 24-11-2020 | 10:24 AM
Colombo (News 1st) வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம், இலங்கையின் வட கிழக்கு கரையோர பிரதேசத்திற்கு அண்மையாக நகர்ந்து தமிழத்தின் கரையோர பிரதேசத்தை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் வட பிராந்தியம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சில கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன், மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழில் நடவடிக்கையை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.