English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Nov, 2020 | 10:15 am
Colombo (News 1st) ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உயர் செயற்றிறன் மிக்கதென பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மக்களிடையே COVID -19 பரவுவதனை இந்த தடுப்பு மருந்து கட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து 70 வீத பாதுகாப்பை வழங்குவதாக இடைக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்ற போதிலும், 90 வீதத்திற்கும் அதிகமான பாதுகாப்பை அது வழங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெற்றியாக கருதப்படுகின்ற போதிலும், Pfizer மற்றும் Moderna ஆகிய தடுப்பு மருந்துகள் 95 வீத பாதுகாப்பை வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த இரு தடுப்பு மருந்துகளையும் விட ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து மலிவானதும் களஞ்சியப்படுத்தி வைக்க இலகுவானதுமாகும்.
மேலும் உலகின் எப்பகுதியிலும் இதனை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்குமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் இந்த தடுப்பு மருந்து, ஒழுங்குபடுத்துநர்களால் அங்கீகரிக்கப்படுமிடத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பாரிய பங்காற்றுமெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
26 Jan, 2021 | 08:33 PM
22 Jan, 2021 | 08:30 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
c[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS