மோட்டார்வாகன திணைக்கள தலைமை காரியாலயம் மீள திறப்பு

மோட்டார் வாகன திணைக்கள தலைமை காரியாலயத்தை மீள திறக்க தீர்மானம் 

by Staff Writer 23-11-2020 | 4:27 PM
Colombo (News 1st) மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டிய தலைமை காரியாலயத்தை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் நாளை (24) முதல் மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும் அலுவலகத்திற்கு வருகை தருவதற்கு முன்னர், நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழகக்கோன் அறிவுறுத்தியுள்ளார். திணைக்களத்தின் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு நாள் மற்றும் நேரத்தை ஒதுக்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.