by Staff Writer 23-11-2020 | 7:16 PM
Colombo (News 1st) மன்னார் - மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் மன்னார் நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில் இன்று (23) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இன்று அனுமதி பெறப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் சிலரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றுக் கொள்வதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.