LPL தொடர்; வௌிநாட்டு வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்

LPL தொடர்: வௌிநாட்டு வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்

by Staff Writer 22-11-2020 | 4:35 PM
Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள வௌிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் சிலர் இன்று (22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச விளையாட்டரங்களில் ஆரம்பமாகவுள்ளது. கலொம்போ கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், தம்புள்ளை வய்க்கிங், ஜெப்னா ஸ்டேலிய்ன்ஸ், கோல் க்ளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் இதில் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்கும் சில வீரர்கள் நேற்றிரவும் இன்றும் நாட்டை வந்தடைந்தனர். இதில் இந்திய வீரர்கள் இருவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரும் அடங்குகின்றனர்.