by Staff Writer 22-11-2020 | 1:08 PM
Colombo (News 1st) வௌிநாடுகளில் தங்கியுள்ள மேலும் 93 இலங்கையர்கள் இன்று (22) நாடு திரும்பியுள்ளனர்.
கத்தாரிலிருந்து 41 பேரிம் துபாயிலிருந்து 50 பேரும் இன்று நாட்டை வந்தடைந்ததாக COVID - 19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனிடையே முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4193 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் 10514 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக COVID - 19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.