3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் 

மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் பாடசாலைகள் நாளை ஆரம்பம் 

by Staff Writer 22-11-2020 | 11:07 AM
Colombo (News 1st) மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் 3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளை (23) ஆரம்பமாகவுள்ளன. தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.