பண்டாரகமவின் 7 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

பண்டாரகம பொலிஸ் பிரிவின் 7 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன 

by Staff Writer 22-11-2020 | 9:25 AM
Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ராகமை, வத்தளை, பேலியகொடை மற்றும்  களனி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலிருக்கும் என  அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.