கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை Lockdown தளர்வு

கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை Lockdown தளர்வு 

by Staff Writer 22-11-2020 | 8:53 AM
Colombo (News 1st) பொரளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, ஜா எல மற்றும் கடவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (23) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளன. இதேவேளை, பொரளை வணாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் கொம்பனிவீதியின் வேகந்த கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலிருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.