ஏலத்தில் விடப்பட்ட மகாத்மா காந்தியின் கடிகாரம்

ஏலத்தில் விடப்பட்ட மகாத்மா காந்தியின் கடிகாரம்

by Staff Writer 22-11-2020 | 4:41 PM
Colombo (News 1st) மகாத்மா காந்தி பயன்படுத்திய உடைந்த கடிகாரம் பிரித்தானியாவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈஸ்ட் பிரிஸ்டல் நிறுவனத்தின் ஏலத்தில் 12,000 ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு குறித்த கடிகாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த கடிகாரத்தை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் காந்தியால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்பட்ட மூக்குக் கண்ணாடி 260,000 ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.