வௌிநாடுகளிலிருந்து 121 பேர் தாயகம் திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து 121 பேர் தாயகம் திரும்பினர்

by Staff Writer 21-11-2020 | 2:02 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்ப முடியாமலிருந்த 121 இலங்கையர்கள் இன்று (21) தாயகம் திரும்பியுள்ளனர். அபுதாபியிலிருந்து 21 பேரும் தோஹா கத்தாரிலிருந்து 42 பேரும் இந்தியாவிலிருந்து 58 பேரும் நாடு திரும்பியுள்ளதாக COVID - 19 தொற்று தடுப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதனிடையே, கத்தாரிலிருந்து 296 பேர் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக COVID - 19 தொற்று தடுப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. 38 நிலையங்களில் 3894 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்