பண்டாரகம - அட்லுகம பகுதிக்கு பயணக் கட்டுப்பாடு

பண்டாரகம - அட்லுகம பகுதிக்கு பயணக் கட்டுப்பாடு விதிப்பு 

by Staff Writer 21-11-2020 | 7:58 PM
Colombo (News 1st) 17 கொரோனா நோயாளர்கள் பதிவானமையினால் பண்டாரகம - அட்லுகம பகுதிக்கு இன்று (21) பிற்பகல் முதல் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தினால், மேற்கொள்ளப்பட்ட எழுமாறான PCR பரிசோதனையின் போது நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அட்லுகம நகரிற்குள் பிரவேசிக்கும் 6 இடங்களில் வீதி தடைகள் இடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை, நோயாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டமையினால், ஹொரணை நகரிலும் சில கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.