முதற்தரமான நிகழ்ச்சிகளை படைத்து வரும் சக்தி FM-இற்கு 22 ஆவது பிறந்தநாள் இன்று

by Staff Writer 20-11-2020 | 12:40 PM
Colombo (News 1st) நேயர்களின் நாடித்துடிப்பறிந்து முதற்தரமான நிகழ்ச்சிகளை படைத்து வரும் சக்தி FM தனது 22 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றது. 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வானொலிகளில் புரட்சிகரமான மாற்றத்துடன் சக்தி FM உதயமானது. அன்று தொடக்கம் இதுவரை தனக்கே உரிய தனியான பாணியில் மாற்றங்களுக்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவதில், சக்தி FM என்றும் முதற்தரமாய் செயற்படுகின்றது. நிகழ்சிகளில் மாத்திரமல்லாது மக்கள் சேவையின் மூலமாகவும் நேயர்களின் மத்தியில் ஒரு தனியிடத்தை தக்க வைத்திருக்கும் சக்தி FM, நேயர்களின் மனங்களைக் கவர்ந்து தொடர்ந்தும் வெற்றிநடை போடுகின்றது. அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் சக்தி FM எப்பொழுதும் பின்நின்றதில்லை. ஊடகத்துறையின் புரட்சியாளனாய், புதுமைகள் பல படைத்து மக்கள் சேவையையும் தொடர சக்தி FM-இற்கு நியூஸ்ஃபெஸ்டின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!