நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம்

வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும் சாத்தியம்

by Staff Writer 19-11-2020 | 12:33 PM
Colombo (News 1st) வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் குழப்பநிலை ஏற்படலாமெனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, நேற்றிரவு பெய்த மழையினால் தெதுறு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் 4 வான்கதவுகள் ஒன்றரை அடி உயரத்திற்கு இன்று அதிகாலை திறக்கப்பட்டன. இதனிடையே, ஹங்குரங்கெத்த - மெரிமவுண்ட் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 18 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் ஏனைய வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.