பாடசாலைகள் 23 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன

மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன

by Staff Writer 19-11-2020 | 12:24 PM
Colombo (News 1st) மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகளை மீளத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தரம் 06 தொடக்கம் 13 வரையான வகுப்புகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இன்று (19) அறிவித்தார்.