மன்னாரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை

மன்னாரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை

by Staff Writer 19-11-2020 | 8:21 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் தினத்தை நினைவுகூர தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் மாவீரர் தினத்தை நினைவுகூர்வதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு கோரி மன்னார் பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐவரும் மாவீரர் தினத்தில் பொதுமக்களை ஈடுபடுத்துவதை தடுக்கும் வகையிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்