கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் காயம்

by Staff Writer 19-11-2020 | 1:04 PM
Colombo (News 1st) புத்தளம் - ஆனமடுவ, ஊத்துவ பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் சுகாதார பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் ஆற்றில் நீராடச் சென்ற போது இந்த சம்பவம் பதிவானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிலாபம் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அனுஷிகா அபேநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என்பதால், அவருக்கு COVID தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் பராமரிக்கப்படுவதை போன்றே இவரும் பராமரிக்கப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் அனுஷிகா அபேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.