இன்றும் பலருக்கு கொரோனா தொற்று

இன்றும் பலருக்கு கொரோனா தொற்று: குணமடைந்த 316 பேர் வீடு திரும்பினர்

by Staff Writer 19-11-2020 | 8:08 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 243 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18,645 ஆக பதிவாகியுள்ளது. 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியதுடன்,குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,903 ஆகும். நேற்று மூன்று கொரோனா மரணங்கள் பதிவானதுடன் அவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 120 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனைகளின் போது தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் பிரிவு நிபுணர் தினுகா குருகே தெரிவித்தார். கொழும்பு முகத்துவாரம் பகுதியை அண்மித்துள்ள அடுக்குமாடி குடியிருப்பை அண்மித்து தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு Rapid Antigen பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இன்றைய தினமும் PCR மற்றும் Rapid Antigen பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெற்றதாக தினுகா குருகே மேலும் தெரிவித்தார்.