English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Nov, 2020 | 7:25 pm
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மயிலத்தைமடு, பெரியமாதவனை மேயச்சல் தரைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சோளப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையின விவசாயிகளால் பண்ணையாளர்களுக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்திகளை சேகரித்து வெளியிட்ட ஊடகவியலாளர் பொலிசாரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாம் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்திலும் மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலகத்திலும் பண்ணையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
22 Jan, 2021 | 05:48 PM
29 Oct, 2020 | 12:56 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS