நாட்டில் இதுவரை 66 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் இதுவரை 66 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 18-11-2020 | 1:08 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை 66 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. COVID-19 தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்றிரவு உயிரிழந்தமையால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 65, 82, வயதுடைய ஆண்கள் இருவரும் 69, 71 மற்றும் 81 வயதுடைய பெண்கள் மூவருமே நேற்று உயிரிழந்தனர். இந்த ஐந்து பேரில் மூன்று பேர் தங்களின் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று 398 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5,799 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 12,210 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.