துறைமுக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

இலங்கை துறைமுக அதிகார சபையின் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

by Staff Writer 18-11-2020 | 12:05 PM
Colombo (News 1st) இலங்கை துறைமுக அதிகார சபையின் நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் துறைமுக நடவடிக்கைகளை இடையூறுகளின்றி முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.