by Staff Writer 17-11-2020 | 1:10 PM
Colombo (News 1st) அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் தரமான PCR இயந்திரங்களை கொள்வனவு செய்ய அதிக நிதியை ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை ராமங்ஞ மகா நிக்காய பீடத்தின் ஹம்பாந்தோட்டை சங்க தலைவர், ஓய்வுபெற்ற அதிபர், வரலாற்று சிறப்புமிக்க மெனிக் ரஜமகா விகாரையின் விகாராதிபதி தங்கல்லே ஜினரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்தார்.