கொழும்பில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரிப்பு

by Staff Writer 16-11-2020 | 3:52 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 109 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மாநகர எல்லையில் நேற்று (15) ஆயிரம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோயியல் நிபுணர் தினுகா குருகே தெரிவித்துள்ளார். இதில் 400 பரிசோதனைகளின் முடிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கிணங்க, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 109 பேர் ப்ளூமெண்டல் மற்றும் அளுத்மாவத்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் என கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோயியல் நிபுணர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்