நாட்டில் 16,583 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 16,583 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 15-11-2020 | 10:20 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (14) 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பேலியகொடை கொத்தணியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களும் இதில் அடங்குகின்றனர். இதன் பிரகாரம் பேலியகொடை கொத்தணியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,084 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் பூசா சிறைச்சாலையில் மேலும் 44 கைதிகளுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஏற்கனவே 285 கைதிகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதற்கமைய, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இதுவரை COVID - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து 283 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,324 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 5,206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக பதிவாகியுள்ளது.