சிறைச்சாலைகளில் 437 பேருக்கு கொரோனா தொற்று

சிறைச்சாலைகளில் 437 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 15-11-2020 | 5:12 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது. 05 அதிகாரிகளுக்கும் 147 கைதிகளுக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் கட்டுப்பாட்டு பிரிவிற்கான ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார். கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை, பூசா மற்றும் பழைய போகம்பறை சிறைச்சாலை ஆகியவற்றில் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.