கொலை குற்றச்சாட்டை நிராகரிக்கும் நைஜீரியா

சர்வதேச மன்னிப்பு சபையின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் நைஜீரியா

by Staff Writer 15-11-2020 | 5:12 PM
Colombo (News 1st) நிராயுதபாணிகளை கொலை செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நைஜீரிய இராணுவம் நிராகரித்துள்ளது. லாகோஸில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இராணுவத்தினர், துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த மோதல்களின் போது 12 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வசேத மன்னிப்புச் சபை குற்றஞ்சுமத்தியிருந்தது. எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நைஜீரிய இராணுவத்தளபதி பிரிகேடியர் ஜெனரல் அஹமட் டைய்வோ, இது குறித்து விசாரணை செய்யும் குழுவினரிடம் காணொளி மூலம் சாட்சியம் வழங்கியுள்ளார்.