வட்டுக்கோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை

by Staff Writer 14-11-2020 | 12:41 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10.30 அளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் பகுதியை சேர்ந்த 34 மற்றும் 56 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக நிலவிய முறுகல் நிலை வலுப்பெற்றதால், இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த மோதல்களில் 15 பேர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.