by Staff Writer 14-11-2020 | 1:02 PM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினம் 468 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 16,191 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 05 கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டன.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு 13 -ஐ சேர்ந்த இருவரும், கொழும்பு 14, சிலாபம் இரத்மலானை பகுதிகளை சேர்ந்தவர்களுமே உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து 378 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,031 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 5107 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.