வௌிநாடுகளிலிருந்து மேலும் 34 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து மேலும் 34 பேர் தாயகம் திரும்பினர்

by Staff Writer 13-11-2020 | 10:55 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 34 இலங்கையர்கள் இன்று (13) நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 18 பேரும் ஜப்பான் நரிட்டாவிலிருந்து 16 பேரும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர், தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.