இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் நாட்டிற்கு...

இலங்கையர்களை நாட்டிற்கு அழைக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் மீண்டும் 

by Staff Writer 13-11-2020 | 4:05 PM
Colombo (News 1st) வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் அத்தியாவசியமான தரப்பினர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அடுத்த வாரம் முதல் முறையான திட்டத்திற்கு அமைய வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். நாட்டின் COVID - 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்