விதிமுறைகளை மீறிய 15 பேர் முகத்துவாரத்தில் கைது 

விதிமுறைகளை மீறிய 15 பேர் முகத்துவாரத்தில் கைது 

by Staff Writer 12-11-2020 | 6:32 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களை கண்காணிக்க விமானப்படையின் உதவியுடன் Drone கெமராக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட முகத்துவாரம் பகுதியில் Drone கெமராக்களில் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு இணங்க பொதுமக்கள் செயற்படுகின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த Drone கெமராக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.