போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் 

பழைய போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

by Staff Writer 12-11-2020 | 11:11 AM
Colombo (News 1st) பழைய போகம்பறை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளுக்கும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, கைதிகளுக்கு நாளாந்தம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நிலையிலேயே, கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம் கைதிகளுக்கு 100 முதல் 150 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.