சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுறுத்தல் 

by Staff Writer 12-11-2020 | 4:24 PM
Colombo (News 1st) தீபாவளி பண்டிகையை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு, இந்து மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. COVID - 19 வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேநேரம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட அதிக அபாயம் நிலவும் பகுதிகளில் இருந்து நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு பயணங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அனைவரும் செயற்படுவது அவசியம் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.