சுகாதார விதிகளை மீறிய 157 பேர் கைது

சுகாதார விதிகளை மீறிய 157 பேர் கைது

by Staff Writer 12-11-2020 | 1:04 PM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவௌியை பேணாத 157 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12 நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றி, ஒத்துழைப்பு வழங்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வௌியேறவோ அல்லது அப்பகுதிகளுக்கு பிரவேசிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.