by Staff Writer 11-11-2020 | 11:08 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வெல்லாவௌி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தபுரம் பகுதியில் மோட்டார்சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் வெல்லாவௌி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ரஜகல்தென்ன பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.