பயண கட்டுப்பாட்டை மீறிய இருவர் கைது

பயண கட்டுப்பாட்டை மீறிய இருவர் கைது

by Staff Writer 11-11-2020 | 1:24 PM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் இதுவரை 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயண கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் கந்தானை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இந்தநிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழ்வோர் வீடுகளில் இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள 05 குடியிருப்பு தொகுதிகளிலும் வசிக்கும் மக்கள் வௌியில் செல்ல முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளால் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.