by Staff Writer 11-11-2020 | 2:22 PM
Colombo (News 1st) மன்னார் - தாராபுரம் பகுதியில் 07 கிலோ 815 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தாராபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.