முகக்கவசம் அணியாத 125 பேர் இதுவரை கைது

முகக்கவசம் அணியாத, சமூக இடைவௌியைப் பேணாத 125 பேர் இதுவரை கைது

by Staff Writer 10-11-2020 | 12:17 PM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாத, சமூக இடைவௌியைப் பேணாத 125 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 05 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைவாக, பொதுமக்கள் செயற்பட வேண்டியது அவசியமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தினார். ஆகவே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழ்வோர் மாத்திரமின்றி ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்களும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டுமெனவும் சமூக இடைவௌியைப் பேண வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.